Monday, September 19, 2011

Winnie the Pooh

“You can't stay in your corner of the Forest waiting for others to come to you. You have to go to them sometimes.”

Winnie the Pooh

Winnie the Pooh

Rivers know this: there is no hurry. We shall get there some day.
Winnie the Pooh
Pooh's Little Instruction Book

Winnie the Pooh

"I don't see much sense in that," said Rabbit. "No," said Pooh humbly, "there isn't. But there was going to be when I began it. It's just that something happened to it along the way."
Winnie the Pooh
Winnie the Pooh

Winnie the Pooh


Eeyore was saying to himself, "This writing business. Pencils and what-not. Over-rated, if you ask me. Silly stuff. Nothing in it."
Winnie the Pooh

Saturday, April 23, 2011

Ahalya

அஹல்யா

நான் ஒரு கல்

வீதியின் ஓரத்தில் இருக்கும் ஒரு சாதாரண கல்.
ராமனின் வருகைக்காக காத்துகொண்டிருக்கிற
ஒரு சின்ன பாறை.

என் உள்ளம் என் சோகத்தால் கரைந்தாலும்
என் கண்ணீர் பாறைக்குள் ஈரமாக என்னுள் தங்கிவிட்டது

என்னை பஞ்சகன்யாவில் ஒரு கன்னியாக உலகம் பூசித்தலும்
என் வரலாறு ஒரு கேள்வி ஆகிவிட்டதல்லவா?


பிரமன் என்னை ஒரு இலட்சிய பெண்ணாக உருவாக்கினான்
தாயில்லாமல் வளரும் என்னை ரிஷி கௌதமரின் கையில் ஒப்படைத்தான்

தந்தையாக என்னை வளர்த்த ரிஷியே உன்னிடம் என்னை நான் ஒப்படைத்துகொண்டுவிட்டேன்
தந்தையே............... என் மனது உனக்கு புரியவில்லையா?

மனதும் தாபமும் புரிந்ததினால் தான் இந்த கடுஞ்சினமா?
நான் மரபு தாண்டினேன் என்று நினைத்துகொண்டு என்னிடம் நீ கொபித்துகொண்டால் .....ரிஷியே
உன்னிடம் என் சீற்றத்திருக்கு விலை ஏது?

நான் கல் ஆக்கப்பட்டேன் என்று எனக்கு சோகமில்லை
பெண் என்று என்னை தூசித்து, என் சைகையை கண்டனம் செய்து
ராமனின் வருகைக்காக என்னை காத்திருக்க வைத்து
மறுபடியும் என்னை ஒரு கன்னியாக மாற்றி
பூசிக்க வைக்கும் ஆணே
உன்னை நீனே தாழ்த்திக்கொண்டு விட்டாய்

மரபு தாண்டியது நீதான்
ரிஷியே நானில்லை

Mandodari

மண்டோதரி

வீணையில்
என்னவரின் சிவஸ்துதி கேட்டேன்,
ஸ்லோகத்தின் நுடிகளில் ஒரு தூய்மையை உணர்ந்தேன்,
மனசில் ஒரு ஆனந்தம்,
அந்த மனசின் வெண்மையை மனசார உணர்ந்தேன்.

ஆனால் இந்த வெண்மையின் அந்திரங்கத்துள் ஏனிந்த கருந்துளை?

முற்றும் மூன்று உலகத்தை தன் உள்ளங்கையால் ஆண்வதற்கு,
ஏனிந்த பேராசை?

நான் மண்டோதரி, சாஸ்திர பூரணமாக அவரின் கை பிடித்தேன்
அக்னியின் சாட்சியில் அவர் உலகத்தில் பங்கு கேட்டேன்
ஆனால் அவர் இதயத்தின் ஆழத்தில் என் ஆட்சி செல்லவில்லையே, ஏன்?

என் விழியன் மொழி அவருக்கு புரியவில்லயே........
என் அதரங்களின் ஏக்கக்குரல் என்னவரின் அட்டஹாசதில் எங்கே புதைந்ததோ ?
என் மௌனமே அவருக்கு ஒரு ஆயுதமாகிவிட்டதோ?

அவரின் பிழைகளை கண்டு என் நெஞ்சம் பதறுகிறது
என் குரல் ஒரு மௌனகுயிலின் குரலாக என்னில் தங்கிவிட்டதே? ஏன்?

அஞ்சாநெஞ்சம் கொண்ட என்னவரின் வீழ்ச்சியை நான் உண்மையாக உணர்கிறேன்
என் உணர்வு அவருக்கு புரியவில்லயே..........

சிவனின் பக்தன் என்னவர் ராவணனின் வீரமரணத்தை நான்
கண்ணார காண்கிறேன்
என்னால் ஒன்றும் சைய்யமுடியவில்லயே .....
இதுதான் விதியா ?
இதுதான் விதியின் விளையாட்டா?

நான் மண்டோதரி, ராவணனின் தரும பத்தினி
என்னவரின் வீழ்ச்சியில் நான் சமபங்காளி, கூட்டாளி.......
என்னை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லையே ...... ஏன் ?

நான்
மண்டோதரி, ராவணனின் தரும பத்தினி ....